இங்கு அட்டவணைப்படுத்தபட்டுள்ள ஏழுவிதமான சொற்களுக்கிடையே அர்த்த ரீதியாக உள்ள வேறுபாடுகள் உனக்குத் தெளிவாகத் தெரியும்வரை உன் அறிவு தெளிவற்றதாகவே இருக்கும். எதையும் குழப்பமில்லாமல் தெளிவாக எடுத்துரைக்கவோ, புரிந்துகொள்ளவோ உன்னால் முடியாது. சொற்களுக்கிடையே அர்த்த ரீதியாக உள்ள வேறுபாடுகளைத் தெளிவாக நீ அறிந்திருந்தால்தான் எக்கருத்தையும் உன்னால் குழப்பமில்லாமல் தெளிவாக எடுத்துரைக்கவும், புரிந்துகொள்ளவும் முடியும். எக்கருத்தையும் குழப்பமில்லாமல் தெளிவாக எடுத்துரைக்கவும், புரிந்துகொள்ளவும் முதற்படி சொற்களுக்கிடையே அர்த்த ரீதியாக உள்ள வேறுபாடுகளை அறிந்துகொள்வதுதான். முதலில், இங்கு அட்டவணைப்படுத்தபட்டுள்ள ஏழுவிதமான சொற்களுக்கிடையே அர்த்த ரீதியாக உள்ள வேறுபாடுகளைக் கண்டால் மட்டுமே உன் அறிவில் தெளிவு பிறக்கும். உன் கருத்தை, உன் எண்ணத்தைத் தெளிவாகக் குழப்பமில்லாமல் உலகிற்கு எடுத்துரைக்க விரும்பினால், மற்றவர்களின் கருத்துகளை, எண்ணங்களை தெளிவாகக் குழப்பமில்லாமல் புரிந்துகொள்ள விரும்பினால், இங்கு அட்டவணைப்படுத்தபட்டுள்ள ஏழுவிதமான சொற்களுக்கிடையே அர்த்த ரீதியாக உள்ள வேறுபாடுகளைத் தெளிவாகச் சுட்டிக்காட்டக் கற்றுக்கொள். சொற்களுக்கிடையே அர்த்த ரீதியாக உள்ள வேறுபாடுகளைக்கூட அறியாமல் சொற்களை எழுதிவைத்துப் வாசிப்பதாலும், மற்றவர்கள் எழுதிவைத்ததைப் படிப்பதாலும் உன் அறிவில் எவ்விதத் தெளிவும் ஏற்படப்போவதில்லை. இவ்வேழு விதமான சொற்களுக்கிடையே அர்த்த ரீதியாக உள்ள வேறுபாடுகளை உன்னால் காணமுடியாவிட்டால், உலகில் உலாவரும் ஆசிரியர்களிடம், பேராசிரியர்களிடம், சிந்தனையாளர்களிடம், எழுத்தாளர்களிடம், ஞானிகளிடம், விஞ்ஞானிகளிடம், கவிஞர்களிடம், பேச்சாளர்களிடம், தலைவர்களிடம், யோகிகளிடம் இச்சொற்களுக்கிடையே அர்த்த ரீதியாக உள்ள வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டச் சொல்லித் தெரிந்துகொள். அறிவில் தெளிவின்மை உன் தோல்விக்கு வழிவகுக்கும்.
“சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து”