எதையும் நீக்கமற அறியாதவனின் அறிவு குறையுடையது. எதாயினும் அதை நீக்கமற அறிவது எப்படி? எப்பொருளாயினும் அப்பொருளை ஒருவர் நீக்கமற அறிந்தவரா, அறியாதவரா என்பதை சோதித்து உறுதிபடுத்தும் முறையை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அறிந்திருக்காவிடில், பொய்யும் புரட்டும் நிறைந்த உலகில், ஏமாற்றுகாரர்களால் நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள்.