SINGLE EYE STERLING PRAYER | தெளிவான பார்வை சரியான பிரார்த்தனை நாள்: 08.05.2022. தலைப்பு: தெளிவான பார்வை சரியான பிரார்த்தனை. போதகர் : முனைவர் இராபர்ட் சைமன். இந்த காலை தியானத்திற்கான தலைப்பு தெளிவான பார்வை சரியான பிரார்த்தனை. மத்தேயு 6-ம் அதிகாரத்தின் விளக்கவுரை செய்தியை பார்க்கப்போகிறோம். இந்த வார்த்தைகளின் அகராதி பொருள்களை பார்க்கலாம். STERLING -ஆங்கிலேயர்களின் நாணயத்தை குறிப்பதாகவும் இருக்கிறது. தெளிவான - இதனுடைய பொருள் –அருமையான, தெளிவானது, எல்லாவற்றிற்கும் மேலானது. தமிழ்பொருள் – கலப்பற்ற, போலியில்லாத, சிறந்த குணங்களுள்ள மெய் மதிப்புள்ள, உள்ளார்ந்த மதிப்புடைய, தன்னிலை மதிப்புடைய அப்பழுக்கற்ற, புறப் பகட்டு தோற்றமற்ற . நம்முடைய ஜெபம் எப்படி இருக்க வேண்டும்? நம்முடைய ஜெபம் தலைசிறந்த ஜெபமாக இருக்க வேண்டும். அது நேர்கொண்டபார்வையாக இருக்க வேண்டும். அதாவது தெளிவான ஒற்றை பார்வை. இரண்டு கண்களும் ஒரே குவிமையத்தோடு காணப்பட வேண்டும். எனக்கு இரண்டு கண்கள் உள்ளது. ஆனால், பார்வை ஒன்றுதான். இதைத்தான் ஒற்றை பார்வை என்கிறோம். கலப்பற்ற, போலியில்லாத, சிறந்த குணங்களுள்ள மெய் மதிப்புள்ள, உள்ளார்ந்த மதிப்புடைய, தன்னிலை மதிப்புடைய, அப்பழுக்கற்ற, புறப்பகட்டு தோற்றமற்ற ஒரு ஜெபத்திற்கு, பிரார்த்தனைக்கு, தெளிவான ஒற்றைப் பார்வை தேவை. மத்தேயு 6-ம் அதிகாரத்தில் யூதர்களுடைய மிக மிக முக்கியமான மூன்று கடமைகளை குறித்து பேசுகிறார். இந்த மூன்று கடமைகளை நிறைவேற்றாமல் ஒருவரால் யூதராய் இருக்க முடியாது. ஒன்று தர்ம காரியம் இரண்டு ஜெபம் மூன்று உபவாசம் உங்களுடைய வாழ்க்கையில் இந்த மூன்று காரியங்களை நிறைவேற்றாமல் நீங்கள் ஒரு யூதராய் இருக்க முடியாது. மத்தேயு 6:5 கூறுகிறது 5 அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். இங்கே ஜெப ஆலயம் என்பது மக்களின் கூடுகையை குறிக்கும். மற்றவர்கள் காணும்படியாக அந்த ஜனங்கள் ஜெபிக்க கூடுகிறார்கள். இவர்கள் மாயக்காரர்கள். மத்தேயு 6:8 கூறுகிறது 8 - அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். எது சிறந்த பிரார்த்தனை? ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப செய்வதல்ல, அல்லது மாய காரர்கள் செய்வதுபோல் மற்றும் மற்றவர்கள் நம்மை பார்க்க வேண்டும் என்று ஜெபம் செய்யாதீர்கள். நான் பரலோக சிந்தை உள்ளவனா? பூலோக சிந்தை உடையவனா? நான் பரலோகத்திற்கு போக வேண்டும். என்னுடைய நோக்கம் ஊழியம் அல்ல. என்னுடைய நோக்கம் பரலோகம். என்னைப் பொறுத்தவரையில் எங்கே தேவன் என்னை வைக்க விரும்புகிறாரோ அதுதான் எனக்கு பரலோகம். உங்களில் உள்ள வெளிச்சத்தை கண்டு கொள்ளுங்கள். உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். ஒரே குவி சிந்தனையுள்ள ஜெபம் வேண்டும். நீங்கள் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய முடியாது. For More details, Download this document. Watch at, https://youtu.be/a1heOOKhBE0