The Holy Qur'an Arabic Text and Sinhala Translation 10 Partsmuzaffertahir9
The Holy Qur'an Arabic Text and Sinhala Translation 10 Parts
The Best Among you is the one who learns the Qur’an and teaches it“
The Holy Prophet (Sw)”
Those who honour the Qur’an shall be honoured in heaven“The Promised Messiah(AS)”
A brief illustrated guide to understanding Islam ( Sinhala language ) Islam p...Islamic Invitation
http://www.islamic-invitation.com/book_details.php?bID=626
A brief illustrated guide to understanding Islam ( Sinhala language ) Islam pilibandhava Keti Avabodhayakata Rupitha Maga Penvemak
Sinhala (Sinhalese)
The Holy Qur'an Arabic Text and Sinhala Translation 10 Partsmuzaffertahir9
The Holy Qur'an Arabic Text and Sinhala Translation 10 Parts
The Best Among you is the one who learns the Qur’an and teaches it“
The Holy Prophet (Sw)”
Those who honour the Qur’an shall be honoured in heaven“The Promised Messiah(AS)”
A brief illustrated guide to understanding Islam ( Sinhala language ) Islam p...Islamic Invitation
http://www.islamic-invitation.com/book_details.php?bID=626
A brief illustrated guide to understanding Islam ( Sinhala language ) Islam pilibandhava Keti Avabodhayakata Rupitha Maga Penvemak
Sinhala (Sinhalese)
This is a guideline note of assignment writing for the students of Bhiksu University of Sri Lanka. Students can follow the outcome base process of 8 steps in their research and assignment writing.
This is a guideline note of assignment writing for the students of Bhiksu University of Sri Lanka. Students can follow the outcome base process of 8 steps in their research and assignment writing.
This document provides information about WAMY Sri Lanka, including their contact details, mission, and services. It summarizes their work in three areas: education, social services, and religious guidance. It also describes how they help orphans and underprivileged children through educational support, basic needs assistance, and moral/spiritual guidance. Finally, it emphasizes that WAMY Sri Lanka aims to serve all people equally regardless of ethnicity, religion, or political beliefs.
மாதங்கள் பன்னிரண்டு. அவற்றில் ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட
சிறப்புண்டு. 'ரஜப் அல்லாஹ்வுடைய மாதம். ஷஃபான் என்னுடைய
மாதம். புனித ரமழான் எனது உம்மத்துடைய மாதம்.' என்ற நபிமொழி
இறுதித்தூதர் (ஸல்) அவர்களின் உம்மத்துக்கு அருளாக வழங்கப்பட்ட
மாதமே ரமழான் என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது.
ரமழான் மாதம் இரண்டு வகையில் மகத்துவம் பெறுகின்றது. முழு மனித
சமூகத்துக்கும் நேர்வழி காட்டக்கூடிய அல்லாஹ்வின் இறுதி வேதம்
உலகுக்கு அருளப்பட்ட மாதம் என்ற வகையில் ரமழான் மிக
கண்ணியத்துக்குரிய ஒரு மாதமாகும்.
அல்லாஹ் தன் அடியார்களை பாவங்களிலிருந்து பரிசுத்தப்படுத்தவும்,
அவர்களிடம் நன்மைகளின்பால் தீவிர ஆசையை ஏற்படுத்தவும் இப்புனித
மாதத்தில் அல்லாஹ் நோன்பை விதியாக
This document provides information about the World Assembly of Muslim Youth (WAMY) Sri Lanka chapter. It discusses WAMY's mission to empower Muslim youth and communities through educational and social programs. It highlights WAMY's work in areas like education, healthcare and community services. The document praises WAMY's positive influence and encourages support for the organization's efforts.
மனிதனது வளர்ச்சிப் பருவங்களில் இளமைப் பருவம்
முக்கியமானதாகும். மேலும் சமூகத்தின் எழுச்சியையும்
வீழ்ச்சியையும் அல்லாஹ் இந்த இளைஞர்களது கையிலேயே
வைத்திருக்கிறான் என்றால் கூட அது மிகையல்ல. உலக
நாகரிகங்களைக் கட்டியெழுப்பியதில் இளைஞர்கள் வகித்த பங்கு
குறிப்பிடத்தக்கதாகும்.
இளமைப் பருவத்தில்தான் உணர்ச்சிகள் பிரவாகிக்கின்றன.
துடிப்பும் வேகமும் முதன்மை ஊக்கமும் மனோவலிமையும்
சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் கொண்ட பருவம் அது.
இளைஞர்கள் குழைத்தமாவுக்கு ஒப்பானவர்கள். அவர்களை
சமூகத்தின் மூத்தவர்களும் தலைவர்களும் தொடர்புசாதனங்களும்
விரும்பும் விதங்களில் திசை திருப்ப முடியும். அவர்களை கூரிய
ஆயுதத்திற்கு ஒப்பிடலாம் . அந்த ஆயுதத்தை
நற்காரியங்களுக்காகப் பயன்படுத்த முடியும் என்பது போலவே
அதனை வைத்திருப்பவர் நாடினால் கொலைகள் செய்யவும்
அதனை உபயோகிக்க முடியும். எனவே இளைஞர்கள் விடயமாக
அதிக கரிசனை காட்டுவது ஒரு சமூகத்தின் கட்டாயக்
கடமையாகும
இஸ்லாத்தை விளங்குவதிலும் செயற்படுத்துவதிலும் சமநிலை பேணல்wamysl
இஸ்லாம் ஒரு சமநிலையான மார்க்கம். எனவே அதற்கான உழைப்பும் சமநிலைத்தன்மை கொண்டதாக அமைவது அவசியமாகிறது. இந்தச் சமநிலை இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளல், அதனை நடைமுறைப்படுத்தல் ஆகிய இரண்டிலும் பிரதிபலிக்க வேண்டுமன எதிர்பார்க்கப்படுகிறது.
சமநிலை என்பது பிரபஞ்ச விதியாகும். முழுப்பிரபஞ்சமும் இச்சமநிலையின் அடிப்படையிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தவகையில்தான், அது மார்க்கத்தின் இயல்பாகவும், யதார்த்தமும் இஸ்லாமிய அழைப்பாளர்களது அனுபவமும் வற்புறுத்துகின்ற அம்சமாகவும் உள்ளது. முஸ்லிம் சமூகம் இச்சமநிலைப் பண்பைக் கைவிட்டு, இரு தீவிரங்களில் ஒன்றை எடுத்துக்கொள்ளும் போதே அதில் கோளாறு தோன்ற ஆரம்பிக்கிறது.
இந்த உம்மத் ஒரு நடுநிலையான உம்மத். முன்பு வாழ்ந்த சமூகங்களிலிருந்து அது பெரிதும் வேறுபடுகிறது. யூதர்கள் இறை கட்டளைகளை நிறைவேற்றாமல் சமநிலை பிறழ்ந்தனர். கிறிஸ்தவர்களோ தீவிரமாகச் சென்று வழிதவறினர். எனவேதான், யூதர்களை 'கோபத்திற்குட்பட்டவர்கள்' என்றும், கிறிஸ்தவர்களை 'வழிதவறியவர்கள்' என்றும் அல்லாஹ் அடையாளப்படுத்தினான். யூதர்களது அறிவோடு செயல் இணையாதிருந்ததும், கிறிஸ்தவர்கள் அல்லாஹ் பற்றிய சரியான அறிவின்றி அவனை வணங்கியதுமே இதற்கான காரணமாகும். இந்தப் பின்னணியிலேயே ஸுஃப்யான் பின் உயைனா (றஹ்)
தலைமைத்துவம் என்பது மனிதர்கள் மீது தாக்கம் விளைவிப்பதை
நோக்கிய செயற்பாடாகும். ஒரு நிர்வாகத்தின் கீழ் உள்ளவர்களை அந்த
நிர்வாகத்தின் இலக்குகளை அடையும் வகையில் ஒத்துழைக்கச் செய்வதே
இதன்மூலம் எதிர்பார்க்கப்படும் விளைவெனலாம். குறிப்பிட்ட சில
இலக்குகளை அடைந்து கொள்வதற்காக தனி நபர்களையும் குழுக்களையும்
வழிகாட்டி, நெறிப்படுத்தி, தூண்டுதல் வழங்குதல் என்றும் இதனைக்
கூறலாம். ஒரு நபரிடமிருந்து அவரால் முடியுமான உச்ச பணியைப் பெற்றுக்
கொள்ளும் செயற்பாடு என்றும் தலைமைத்துவத்தை வரைவிலக்கணப்
படுத்தலாம். இது மிகச் சிறந்த ஒரு தலைவருடன் இணைந்து அதன்
கீழுள்ளவர்கள் மனத்திருப்தியோடு பணியாற்றுதல் என்ற பொருளைப்
பொதிந்து நிற்கிறது. அந்தவகையில், தலைவரது பண்புகளிலும் அவரது
தலைமைத்துவப் பாணியிலுமே இவ்வம்சம் பெரிதும் தங்கியுள்ளதெனலாம்.
வெறுமனே கட்டளைகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்குவதன்
மூலமாக மாத்திரம் தலைமைத்துவப் பணி நிறைவடைவதில்லை. தனக்குக்
கீழே உள்ளவர்களுக்குள் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளியே
கொண்டுவந்து, குறித்த பணிக்காக தம்மால் முடிந்த அதிகபட்ச
முயற்சியைச் செலவிட அவர்களைத் தூண்டுவதன் மூலமே இப்பணி
நிறைவடைய முடியும்
அறிவியல் தகவல் தொழில் நுட்பம், இலத்திரனியல்
தொடர்பாடல், பொருளாதார அபிவிருத்தி போன்ற பல்வேறு
துறைகளில் தற்கால உலகம் துரித மாற்றங்களைக் கண்டு வரு
கிறது. இருப்பத்தோராம் நூற்றாண்டு மனிதகுலம் இன்டநெட்
யுகத்தை எட்டிப்பிடித்துள்ளது. கோள்களில் மனிதர்களைக் குடி
யேற்றலாமா என்று கூட ஆய்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.
மொத்தத்தில் அறிவியல் ஆய்வுத் துறைகளில் மனித குலம் பாரிய
எட்டுக்களை வைத்து முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறது
என்பதில் ஐயமில்லை.
ஆனால்...
இதே மனித குலம் ஒழுக்கம், தர்மம், ஆன்மீகம் போன்ற
துறைகளில் அதன் பாதாளத்தை நோக்கி மிக வேகமாக வீழ்ந்து
கொண்டிருக்கிறது. ஆனால், இந்த வீழ்ச்சியும் அதன் பின்னால்
உள்ள பாரிய அழிவும் தூரநோக்குள்ள கண்களுக்கே புலனாகும்.
இதனால் தான் தற்கால தத்துவஞானியான ' ;'
என்பவர் 'வெள்ளைக்காரனின் யுகம் அழிவின் விளிம்பில் இருக்கி
றது' எனக்குறிப்பிட்டார்.