1. ¼ÛV]¦ éì
¼ÛV]¦ éì
¼ÛV]¦ éì
ரா கால ட
ரா கால ட
ரா கால ட
g[tï ¼>¦o[ Amç !!
அ ம க ைண ெப
அ ம க ைண ெப
அ ம க ைண ெப
ஆ மாத !
ஆ மாத !
ஆ மாத !
No.1
No.1 ரா கால ட
ரா கால ட
No.1 ரா கால ட வழ
வழ
வழ
gªÍ>D >òD
g½ V>D
3. நித்ரா
நித்ரா காலண்டர்
காலண்டர் 1
ஆடி மாதம்
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடி மாதத்தை கற்கடக
மாதம் என்றும் அழைக்கிறார்கள். மாதங்களை ப�ொறுத்தவரை உத்திராயணம்,
தட்சிணாயணம் என இரு பிரிவுகள் உள்ளது. இதில் தட்சிணாயணம்
புண்ணிய காலம் ஆடி மாதத்தில் துவங்குகிறது. ஆடி முதல் மார்கழி வரை
தட்சிணாயண காலமாகவும், தை முதல் ஆனி வரை உத்திராயணம் காலமாகவும்
பிரிக்கப்பட்டுள்ளது.
தட்சிணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள்
வெளிப்படும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள் ஆகியவற்றிற்கு
ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது. பிராண வாயு அதிகமாக கிடைப்பதும்
ஆடியில்தான். ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் இது கருதப்படுகிறது.
ஆடி மாதம் சக்தி மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. எனவே இந்த மாதத்தில்
விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். ஆடிப் பட்டம் தேடி விதை
என்ற பழம�ொழி உருவானதற்கும் இதுவே காரணம். உத்திராயண காலத்தில்
சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தட்சிணாயண காலத்தில்
(ஆடி) சூரியனின் ஒளிக்கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்.
சுற்றுப்புறத்தை தூய்மையாக்கி, தெய்வங்களை (அம்மன்) வழிபட்டு
உள்ளுணர்வை மேம்படுத்திக் க�ொள்ளவும் ஆடி மாதம் பயன்படுகிறது.
வேப்பிலையை அம்மனுக்கு சாற்றி வணங்குவதும், கூழ் ஊற்றும் விழா
நடத்துவதும் ஆடி மாதத்தில் நடக்கிறது. இதற்கு காரணம், ஆடி மாதத்தில்
கிடைக்கும் வேப்பிலைக் க�ொழுந்துகளுக்கு அபார மருத்துவ, தெய்வீக குணம்
உண்டு.
4. நித்ரா
நித்ரா காலண்டர்
காலண்டர் 2
ஆடி மாதத்தில் ப�ொதுவாகவே காற்று அதிகமாக வீசும். அந்தக் காலத்தில் எளிதில்
ஜீரணிக்கக் கூடிய வகையிலான உணவுகள் (கூழ்) சாப்பிடுவது நல்லது. இதனால்
ஆர�ோக்கியம் மேம்படும்.
துர்க்கை, காளி உள்ளிட்ட பெண் தெய்வ வழிபாட்டுக்கு உரியதாகவும் ஆடி மாதம்
கருதப்படுகிறது. இதேப�ோல் 18ஆம் பெருக்கு எனப்படும் ஆடி18- விழா மிகவும்
உன்னதமானது. ஆடி மாதத்தில் ஆடிப்பூரம், ஆடி வெள்ளி, நாகலட்சுமி பூஜை,
வரலட்சுமி ந�ோன்பு ஆகிய தினங்களில் விரதம் இருந்து அம்மனை தரிசிப்பது
மிகவும் நல்லது.
ஆடிப்பெருக்கு தினத்தில் நதிய�ோரம் உள்ள க�ோவில்களில் கன்னிப் பெண்கள்
வழிபாடு செய்தால் சிறப்பான கணவர் அமைவர். சுமங்கலிப் பெண்கள்
இதுப�ோன்று வழிபாடு நடத்தினால் அவர்களின் துணைவருக்கு நீண்ட
ஆயுள் கிடைக்கும். ஆகையால் ஆடி மாதத்தில் அம்மனை வழிபட்டு நல்ல
ஆர�ோக்கியத்தைப் பெற்று, நீண்ட ஆயுளுடன் வாழ்வோம்..!!
5. நித்ரா
நித்ரா காலண்டர்
காலண்டர் 3
ஆடி மாதத்தில்
பிறந்தவர்களின் குணநலன்கள்
ஆடி மாதத்தில் பிறந்தவர்கள், குடும்பத்தில் உள்ளவர்களின்மீது அதிக பாசம்
வைத்திருப்பார்கள். ஆனால், அவர்கள் வைத்திருக்கும் பாசத்தை குடும்பத்தில்
உள்ளவர்களிடம�ோ, மற்றவர்களிடம�ோ வெளிக்காட்டிக் க�ொள்ளமாட்டார்கள்.
இவர்கள் கற்பனை வளம் மிக்கவர்கள்.அந்த கற்பனையை செயல்படுத்துவதிலும்
வல்லவர்கள். ஆடி மாதத்தில் பிறந்தவர்களுக்கு தமிழ் ம�ொழி மீது அதிக நாட்டம்
இருக்கும்.
ஆடி மாதத்தில் பிறந்தவர்களை, யாராவது கடுமையான வார்த்தைகளால்
பேசிவிட்டால், இவர்கள் அதை மனதில் வைத்துக்கொண்டே இருப்பார்கள்.
இவர்களுக்கு ஞாபகசக்தி அதிகமாக இருக்கும்.
இவர்களுக்கு யாரையாவது பிடித்துவிட்டால் அவர்களுடன் விரைவில் நட்பு
க�ொண்டு விடுவார்கள். அதே நேரம் அவர்களால் இடையூறு ஏற்பட்டால்
வாழ்க்கையே முடிந்துவிட்டதுப�ோல விரக்தியின் உச்சத்திற்கு சென்று
விடுவார்கள். அதனால் ஆடி மாதத்தில் பிறந்தவர்கள், நண்பர்களை
ப�ொறுத்தவரை அளவ�ோடு இருந்து க�ொண்டால் வாழ்க்கையில் முன்னேற்றம்
கிடைக்கும்.
ஆடி மாதத்தில் பிறந்தவர்களிடம் பேசும்முன் ய�ோசித்து பேச வேண்டும்.
ஏனெனில் இவர்கள் பேச்சாற்றலில் சிறந்தவர்கள். அதேசமயம் இவர்கள் எளிதில்
பிரச்சனையில் சிக்கிக் க�ொள்ள மாட்டார்கள்.
6. நித்ரா
நித்ரா காலண்டர்
காலண்டர் 4
நண்டுஎப்படிதனக்குஆபத்துவருவதைஅறிந்துமுன்னெச்சரிக்கையாகஒளிந்து
க�ொள்கிறத�ோ, அதேப�ோல் இவர்களும் பிரச்சனைகளில் சிக்கிக் க�ொள்ளாமல்
ஒதுங்கிக் க�ொள்வார்கள்.
இந்த மாதத்தில் பிறந்தவர்கள், அரசியலில் ஈடுபட்டால் பழைய தலைவர்களின்
புகழைப்பாடியே நிறைய பணம் சம்பாதித்துவிடுவார்கள். இவர்கள் பணம்
சம்பாதிக்க வேண்டும் என்று திட்டமிட்டு, அதை மட்டுமே குறிக்கோளாகக்
க�ொண்டு செயலில் முழு தீவிரமாக இறங்கி விட்டால், இவர்கள் வெற்றி
பெறுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
அதேநேரம் ச�ோம்பேறியாக பணம் வரும்போது வரட்டும் என்று இருந்துவிட்டால்,
இவர்கள் பிற்காலத்தில் மிகவும் சிரமப்படுவார்கள். ஆடி மாதத்தில் பிறந்த
பெண்களிடம் மனம் க�ோணாமல் நடக்க முயற்சி செய்தால், வாழ்க்கையில் மிக
வேகமாக முன்னேறி விடுவார்கள்.
ஆடி மாதத்தில் குழந்தை
பிறந்தால் ஆட்டிப் படைக்குமா?
தெய்வீகப் பண்டிகைகள் த�ொடங்குகின்ற மாதம் ஆடி மாதம். அம்மனுக்கு உரிய
மாதமாகவும் இது ப�ோற்றப்படுகிறது. பூமாதேவி பூமியில் அம்மனாக அவதரித்த
மாதமும் ஆடி மாதம் தான்.
ஜ�ோதிட சாஸ்திரத்தில் ஆடி மாதத்தை கர்கடக மாதம் என்பார்கள். சூரியன்
குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில்
கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத துவக்கம். தமிழ் மாத பிறப்புகளுக்கு
ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது.
7. நித்ரா
நித்ரா காலண்டர்
காலண்டர் 5
அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும்,
விரத வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர். தமிழ் மாதத்தில் நான்காவது
மாதமான ஆடி, தட்சிணாயன புண்ய காலமாகும். இது தேவர்களின் இரவு நேரம்
என்று புராணங்கள் ச�ொல்கின்றன.
எதுகை, ம�ோனையுடன் நம்மவர்கள் நிறைய ச�ொற்றொடர்களைப் புதிது,
புதிதாகக் கண்டுபிடித்துக் க�ொண்டிருக்கிறார்கள். ஆடி மாதத்தில் ஆண் குழந்தை
பிறந்தால் ஆட்டிப் படைக்கும், ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தால் நாய் படாத பாடு
பட வேண்டும்.
சித்திரையில் பிறந்தா பெத்தவனுக்கு ஆகாது, ஆனியில் பிறந்தா கூனிப்
ப�ோகும், ஐப்பசியில் பிறந்தா பசியில் வாடும் என முட்டாள்தனமான, மூட
நம்பிக்கையை வளர்க்கின்ற பல ச�ொற்றொடர்கள் இங்கு உலா வருகின்றன.
இந்த மாதிரியான ச�ொல் வழக்குகளுக்கு எந்த ஆதாரமும் கிடையாது. இவை
முற்றிலும் ப�ொய்யானவை.
எந்த மாதத்தில் எந்தக் குழந்தை பிறந்தாலும் அவர்களின் ஜாதகத்தில்
அமைந்துள்ள கிரக நிலையின்படியே வாழ்க்கை அமையும் என்பது தான்
உண்மை.
8. நித்ரா
நித்ரா காலண்டர்
காலண்டர் 6
ஆடிப்பிறப்பன்று தேங்காய் சுடுவது ஏன்?
ஆடி மாதம் முதல் நாள் அன்று (ஜூலை 17ஆம் தேதி) தேங்காய் சுடும் பண்டிகை
க�ொண்டாடப்படுகிறது. இந்த தேங்காய் சுடும் பண்டிகையானது மகாபாரதப்
ப�ோருடன் த�ொடர்புடையதாக புராணங்கள் கூறுகின்றது.
அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையில் மகாபாரத ப�ோர் நடைபெற்றது. இந்தப்
ப�ோரானது ஆடி மாதம் 1ஆம் தேதி த�ொடங்கி 18 நாட்கள் நடைபெற்று மகாபாரதப்
ப�ோர் ஆடி18- அன்று முடிவுக்கு வந்தது.
இந்த ப�ோரில் தர்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் த�ொடங்கும் நாளான ஆடி
1ஆம் தேதி மக்கள் அனைவரும் விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களை
வேண்டி பூஜை செய்கிறார்கள். மேலும், இந்த பூஜையின்போது தேங்காய் சுட்டு
அதனை பிரசாதமாக படைத்து வழிபட்டதாக கூறப்படுகிறது.
மேலும், புதியதாக திருமணமான தம்பதியர், தீய எண்ணங்களை முழுமையாக
அகற்றிவிட்டு நல்ல எண்ணங்களை விதைத்து மகிழ்ச்சியான வாழ்வினை
த�ொடங்கவும், செல்வம் பெருகவும், குடும்பத்தில் ஒற்றுமை நிலவி மகிழ்ச்சியாக
இருக்கவும் இவ்விழா க�ொண்டாடப்படுகிறது.
தேங்காய் சுடுவது எப்படி?
தேவையான ப�ொருட்கள் :
» தேங்காய்
» பச்சரிசி
9. நித்ரா
நித்ரா காலண்டர்
காலண்டர் 7
» பருப்பு
» வெல்லம்
» அவல்
» அழிஞ்சிமர குச்சி
புதிய தேங்காயை எடுத்து அதன் மேலுள்ள நார்களை அகற்றிவிட்டு ஓடு
மெலிதாகும் அளவுக்கு அதை தரையில் தேய்க்க வேண்டும். தேங்காயை
தேய்த்ததும், அதன் ஒரு கண்ணில் துளையிட்டு உள்ளே இருந்த தேங்காய்
தண்ணீரின் பாதியை வெளியேற்றிவிட வேண்டும்.
அதன்பின் துளையிட்ட கண்ணின் வழியாக தேங்காய்க்குள் பச்சரிசி, பருப்பு,
வெல்லம், அவல் ஆகியவை கலந்த கலவையை சிறிது சிறிதாக நிரப்ப
வேண்டும். பிறகு நீண்ட ஒரு முனை கூராக சீவப்பட்ட அழிஞ்சிமர குச்சியை
அந்த தேங்காயின் துளையிடப்பட்ட கண்ணில் ச�ொருகுவார்கள். பின்னர் அந்த
குச்சியை சுற்றி மஞ்சளை பூசி துளையை மூடுவர்.
இதை த�ொடர்ந்து வீட்டு வாசலில் ஒரு இடத்தில் சருகுகள், காய்ந்த குச்சிகள்
க�ொண்டு தீ மூட்டி அதை சுற்றி சூழ்ந்து நின்றபடி, ஆரவாரத்துடன் சிறுவர்கள்
முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி ப�ொங்க தேங்காயை சுடுவார்கள். சுடும்போது
தேங்காயின் அனைத்து பகுதிகளும் தீயில்படும்படி, குச்சியின் உதவியால்
தேங்காயை சுழற்றிக்கொண்டே இருக்க வேண்டும். சில நேரங்களில் தீயில்
வேகும்போதே, குச்சியைவிட்டு நழுவி தேங்காய் தீயில் விழுந்துவிடும். பின்
அதை குச்சியை க�ொண்டு வெளியே க�ொண்டு வருவார்கள்.
தேங்காயின் உள்ளே இருக்கும் ப�ொருட்கள் வெந்ததை தெரிவிக்கும் விதமாக,
தேங்காயின் ஓடு கருகி லேசாக தீப்பிடிக்க த�ொடங்கும். அல்லது தேங்காய் ஓட்டில்
வெடிப்புகள் ஏற்பட்டால் தேங்காய் வெந்துவிட்டது என்று அர்த்தம்.
சுட்ட தேங்காயை அருகில் உள்ள க�ோவிலுக்கு எடுத்து சென்று அல்லது
வீட்டின் சுவாமி படத்தின் முன்பு உடைத்து அங்கே சிறிதளவு வைத்துவிட்டு
வழிபட வேண்டும். அதன்பின் வீட்டிலிருக்கும் அனைவருடனும் பகிர்ந்து
உண்ண வேண்டும். தேங்காயில் உள்ள நாட்டு சர்க்கரையின் இனிப்பு ஏறி, சுட்ட
தேங்காயின் மணத்துடன் ருசியாக இருக்கும்.
10. நித்ரா
நித்ரா காலண்டர்
காலண்டர் 8
ஆடி செவ்வாயில் அப்படி என்ன ஸ்பெஷல்?
செவ்வாய்க்கிழமை என்பது செவ்வாய் பகவானுக்கு உரிய நாளாகும். செவ்வாய்
பகவானுக்கு அதிபதியான முருகப்பெருமாளுக்கு உகந்த இந்நாளில் முருகனை
வழிபட்டு வந்தால் நினைத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். அதிலும் ஆடி
செவ்வாய் என்றால் அம்பாளுக்கும், முருகனுக்கும் ஏற்ற நாளாகும். ஆடி
செவ்வாயில் முருகனையும், அம்பாளையும் தீபம் ஏற்றி மனமுருகி வேண்டினால்
வீட்டில் துன்பம் நீங்கி மங்களம் உண்டாகும்.
ஆடி செவ்வாய் சிறப்பு :
செவ்வாய் த�ோஷத்தாலும், நாகத�ோஷத்தாலும் திருமணம் தடைபட்டவர்கள்,
குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை
மற்றும் முருகப்பெருமானை வழிபடுவதால் த�ோஷம் நிவர்த்தியாகி திருமணப்
பாக்கியமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
ஆடி செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் எண்ணெய் வைத்து, மஞ்சள் பூசி
தேய்த்து விரதம் அனுஷ்டித்து அம்மனையும், முருகனையும் வழிபட்டு வந்தால்
மாங்கல்ய பலம் கூடும்.
செவ்வாய்க்கிழமைகளில்ராகுகாலத்தில்அம்பிகையைபூஜிப்பதுவிசேஷமானது.
ஆடி செவ்வாய் அன்று அன்னதானம் செய்வது, மற்ற தினங்களில் அன்னதானம்
செய்தால் கிடைக்கும் பலன்களை விட அதிக பலன்களை பெற்று தரும்.
ஆடி செவ்வாய்க்கிழமையில் கன்னிப் பெண்கள் ஒளவையார் ந�ோன்பிருந்தால்
அவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
11. நித்ரா
நித்ரா காலண்டர்
காலண்டர் 9
விரதமுறை :
இரண்டு குத்துவிளக்குகளில் பஞ்ச தீப எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்
ஊற்றி திரி ப�ோட்டு விளக்கேற்றி, இரு குத்துவிளக்குகளையும் இருபுறமும்
வைத்து விட்டு சாம்பிராணி க�ொளுத்தி, அந்த புகையை பூஜையறை மற்றும்
வீடு முழுவதும் பரவச் செய்ய வேண்டும். இப்போது உங்கள் குலதெய்வத்தை
வணங்கிய பின்பு இந்த ஆடி செவ்வாயில் இறைவனை வேண்டி அன்றைய
தினம் முழுவதும் உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருப்பது நீங்கள் வணங்கும்
இறைவனின் ஆசிகளை பெற்று தரும்.
உடல் சூழ்நிலைக்கு ஏற்ப உங்களுடைய விரதத்தை அமைத்து க�ொள்ளுங்கள்.
பால், பழம் சாப்பிட்டு விரதம் இருந்தாலும் சரி, சாப்பாடு சாப்பிட்டு விரதம்
இருந்தாலும் சரி, எதுவுமே சாப்பிடாமல் விரதம் இருந்தாலும் சரி இந்த
செவ்வாய்க்கிழமை காலை இறைவழிபாட்டை முடித்த பின்பு உணவு உண்ண
த�ொடங்கலாம்.
ஆடி மாத கடைசி செவ்வாய் :
ஆடிமாதத்தின்கடைசிசெவ்வாய்க்கிழமையில்,மறக்காமல்அம்மனைகண்ணார
தரிசித்து மனதார வேண்டி க�ொள்ளுங்கள்.
ராகு கால வேளையில், அம்மனை தரிசித்து செவ்வரளி மாலை சாற்றுங்கள்.
மேலும், துர்க்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி, வழிபடுங்கள்.
ஆடி கடைசி செவ்வாய்க்கிழமையில், அம்மனை தரிசனம் செய்வதால் தடைபட்ட
மங்கள காரியங்கள் அனைத்தும் இனிதே நடைபெறும்.
ஒளவையார் விரதம் :
பெண்கள் ஆடி மாத செவ்வாய்க்கிழமையில் ஒளவையார் விரதம் இருப்பார்கள்.
இவ்விரதத்தின்போது இரவு 10.30 மணிக்கு மேல் அனைவரும் தூங்கிய பின்
விரதம் இருக்கும் பெண்கள் ஒரு வீட்டில் ஒன்று கூடுவார்கள். மூத்த சுமங்கலிகள்
வழிகாட்டுதலின்படி, இளம் பெண்கள் ஒளவையார் விரதத்தை த�ொடங்குவார்கள்.
இவ்விரதத்தின் நிவேதனமாக பச்சரிசி மாவில் வெல்லம் சேர்த்து ஒருவித
வடிவம் க�ொண்ட க�ொலுக்கட்டை தயாரிப்பார்கள். அன்றைய தினம் செய்யும்
நிவேதனங்கள் எதிலும் உப்பு சேர்க்க மாட்டார்கள்.
ஒளவையார் அம்மனை நினைத்து விளக்கேற்றி பூஜை செய்து வழிபாடு
செய்வார்கள்.அதன்பின்ஒளவையாரின்கதையைஒருவர் ச�ொல்லஅனைவரும்
அதைகேட்பார்கள். இறுதியாகபெண்களேவிரதநிவேதனங்கள்அனைத்தையும்
12. நித்ரா
நித்ரா காலண்டர்
காலண்டர் 10
உண்பார்கள். இவ்விரதத்தில் ஆண்களை கலந்து க�ொள்ள அனுமதிப்பதில்லை.
குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கவும், திருமணம் கைகூடவும், குழந்தை
பாக்கியம் கிடைக்கவும், கணவன் நீண்ட ஆயுள் பெறவும் இந்த விரதத்தை
கடைபிடிக்கின்றனர்.
ஆடி வெள்ளியின் சிறப்புகள்
கிழமைகளில் சுக்கிரவாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும்.
அள்ளிக் க�ொடுக்கும் சுக்கிரனுக்குரிய வெள்ளிக்கிழமையன்று, துள்ளித்திரியும்
சிங்கத்தின் மேலே ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகையை வழிபட்டால்,
நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும்.
எந்தவிதத்திலும் பக்திக்கு இடையூறு இருக்கக்கூடாது என்றே ஆடி மாதத்தில்
திருமணம் உள்ளிட்ட இதர குடும்ப விசேஷங்கள் இடம்பெறுவதில்லை.
ஆடி முதல் வெள்ளி மட்டுமின்றி இந்த மாதத்தில் வரும் அனைத்து
வெள்ளிக்கிழமைகளுக்கும் சிறப்பு சேர்க்கும் விதத்தில் காலை, மாலை என
பெண்கள் வீடுகளிலும், க�ோவில்களிலும் அம்மனை வழிபாடு செய்வது வழக்கம்.
மகாலட்சுமியை வழிபட்டால் செல்வ வளம் பெருகும்.
ஆடி வெள்ளி வழிபாடு செய்வது சகல பாக்கியங்களையும் அள்ளித்தரும்.
திருமண பாக்கியம் கைகூடிவரும். புதுமண தம்பதியருக்கும், நீண்ட காலமாக
குழந்தை பாக்கியம் எதிர்பார்த்திருப்போருக்கும் நல்ல அறிவாற்றல், புத்தி
சாதுர்யத்துடன் கூடிய குழந்தை பாக்கியம் உண்டாகும்.
13. நித்ரா
நித்ரா காலண்டர்
காலண்டர் 11
ஆடிவெள்ளிக்கிழமைஅன்றுமாலைநேரத்தில்அம்பிகையை,ஆதிபராசக்தியை,
அகிலாண்டேஸ்வரியை அலங்கரித்து வழிபாடு செய்தால், வளங்கள்
அனைத்தும் வந்து சேரும். ஆலயங்களில் குத்து விளக்குப் பூஜை நடைபெறும்.
1008, 108 விளக்குகள் வைத்துப் பூஜை செய்வதால் நன்மை தேடி வரும்.
சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத
பெண்கள் விரைவில் திருமணம் கூடி வரவும் விரதம் மேற்கொள்கின்றனர்.
ஆடி மாதத்தில் வெள்ளியன்று புற்று அம்மனான நாகதேவதையை வழிபடுவது
சிறப்பானது.
இன்றைய தினம் வாசலில் க�ோலமிட்டு, பூஜையறையில் குத்து விளக்கேற்றி,
நிவேதனமாக பால் பாயசம் அல்லது சர்க்கரைப் ப�ொங்கல் வைத்து லலிதா
சகஸ்ரநாமம், அம்மன் பாடல்களைப் பாடி பூஜை செய்தால் நல்ல பலன்கள்
கிடைக்கும்.
வயதுக்கு வராத பெண் குழந்தைக்கு ரவிக்கை, தாம்பூலம், சீப்பு, சிமிழ், கண்ணாடி
வளையல் தந்து சிறப்பிக்க வேண்டும். அவர்களை அம்மனாகப் பாவித்து
அமுதளிக்க வேண்டும்.
கடைசி வெள்ளிக்கிழமையின் சிறப்புகள் :
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி விஷ்ணு பகவானின் மனைவியான
மகாலட்சுமிக்கு உரியது.
திருமணமான பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரித்து, நீண்ட நாட்கள்
சுமங்கலியாக இருப்பதற்கு ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையின் ப�ோது
ந�ோன்பு இருந்து, மகாலட்சுமிக்கு பூஜை செய்து, படையல் படைத்து, சுமங்கலி
பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் க�ொடுப்பார்கள்.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து அம்மனை வழிபட்டால், கேட்ட
அனைத்தையும் மனமுவந்து மகிழ்வோடு வழங்குவாள் அம்பிகை.
முதல் வெள்ளிக்கிழமை
ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையானது சுவர்ணாம்பிகை அம்மனுக்கு
உரியது. சுவர்ணாம்பிகை அம்மன் பார்வதி தேவியின் ஒரு வடிவம். எனவே,
ஆடி மாத முதல் வெள்ளியின்போது, சுவர்ணாம்பிகை அம்மனை மனம் உருகி
வேண்டினால், வீட்டில் செல்வ வளம் பெருகும்.
14. நித்ரா
நித்ரா காலண்டர்
காலண்டர் 12
இரண்டாம் வெள்ளிக்கிழமை
ஆடி மாதத்தின் இரண்டாம்
வெள்ளிக்கிழமை, அங்காள
அம்மனுக்கு உகந்தது. காளி
தேவியின் மற்றொரு வடிவம்தான்
அங்காள அம்மன். ஆடி மாத
இரண்டாம் வெள்ளியின்போது
அங்காள அம்மனுக்கு பூஜை செய்து
வணங்கி வந்தால், புத்திக்கூர்மை
அதிகரிப்பத�ோடு, வலிமையும், வீரமும்
அதிகரிக்கும்.
மூன்றாம் வெள்ளிக்கிழமை
ஆடி மாத மூன்றாம்
வெள்ளிக்கிழமையானது அன்னை
காளிகாம்பாளுக்கு உகந்தது. இந்த
அம்மன் பார்வதி தேவியின் மற்றொரு
வடிவம். எனவே, காளிகாம்பாளை
மூன்றாம் வெள்ளிக்கிழமையின்போது
வேண்டினால், தைரியம்
அதிகரிப்பத�ோடு, ஆர�ோக்கியமும்
மேம்படும்.
நான்காம் வெள்ளிக்கிழமை
ஆடி மாதத்தின் நான்காம்
வெள்ளிக்கிழமையானது காமாட்சி
அம்மனுக்கு உகந்தது. இவர் சக்தியின்
ஓர் வடிவம். இவரை ஆடி மாதத்தின்
நான்காம் வெள்ளிக்கிழமையின்போது
வணங்கினால், நம்மை சுற்றியுள்ள தீய
சக்தி நீங்கும். திருமணத்தடை அகலும்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஐந்தாம் வெள்ளிக்கிழமை
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி
விஷ்ணு பகவானின் மனைவியான
மகாலட்சுமிக்கு உரியது. இந்த கடைசி
15. நித்ரா
நித்ரா காலண்டர்
காலண்டர் 13
வெள்ளிக்கிழமையின்போது தான் வரலட்சுமி பூஜை நடைபெறும். இந்த பூஜை
திருமணமான பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. திருமணமான
பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரித்து, நீண்ட நாட்கள் சுமங்கலியாக
இருப்பதற்கு, ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையின்போது ந�ோன்பு
இருந்து, மகாலட்சுமிக்கு பூஜை செய்து, படையல் படைத்து, சுமங்கலி
பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் க�ொடுப்பார்கள்.
ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை
ஏன் சிறப்பு பெறுகிறது?
ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமை என்றாலே அம்மனுக்கு கூழ்வார்த்தல்
பண்டிகை தான் நம்முடைய நினைவிற்கு வரும். ஆடி மாதம் வரக்கூடிய எல்லா
ஞாயிற்றுக்கிழமைகளிலும் அம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா எல்லா
க�ோவில்களிலும், வீடுகளிலும் பெரும்பாலும் விமர்சையாக நடத்தப்படும்.
ஆனால் தற்போது உள்ள சூழ்நிலை காரணமாக வீடுகளில் கூழ் காய்ச்சி
அம்மனுக்கு படைத்து வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அம்மனை வழிபாடு
செய்து அருளை பெறலாம். ஆடி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களால்
இயன்ற உதவியை இயலாதவர்களுக்கு செய்யுங்கள்.
அம்மன் ஆடி வெள்ளிக்கிழமை மட்டுமல்லாது வீடுகளில் ஞாயிற்றுக்
கிழமையன்றும் அம்மன் எழுந்தருளுகிறாள். ஆம், ஞாயிற்றுக்கிழமையன்று
வீடுகளில் கூழ்வார்த்து வீதி முழுவதும் வசிக்கும் மக்களுக்கும், வீதியில்
செல்பவருக்கும் கூழ்வார்த்து அம்மன் அருளைப் பெறுகிறார்கள்.
16. நித்ரா
நித்ரா காலண்டர்
காலண்டர் 14
ஆடி ஞாயிற்றுக்கிழமையன்று கூழ் ஊற்றி அம்மனை வணங்குவதால் ந�ோய்கள்
நீங்கி ஆர�ோக்கியத்துடன் வாழலாம்.
கன்னி தெய்வ வழிபாடு :
ஆடி ஞாயிறு என்றால் அது கன்னி தெய்வத்தை வழிபட கூடிய நாள். ஆடி
மாதம் வரக்கூடிய ஒரு ஞாயிற்றுக்கிழமைகளில், அந்த வீட்டினுடைய கன்னி
தெய்வத்தை மனதார நினைத்து பூஜை செய்வார்கள்.
திருமணம் ஆகாத கன்னிப்பெண், இயற்கையான முறையில் மரணம்
அடையாமல், அந்தப் பெண்ணினுடைய ஆயுசு முடிவதற்கு முன்பாகவே
இறக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். அந்த பெண்ணை தான், அந்த
குடும்பத்தினுடைய கன்னி தெய்வமாக நினைத்து வழிபாடு செய்வார்கள்.
ஒரு குடும்பம் வாழையடி வாழையாக தழைத்து வாழ வேண்டுமென்றால்
அந்த குடும்பத்திற்கு கன்னி தெய்வத்தின் ஆசீர்வாதம் மிக மிக முக்கியம்.
உங்களுடைய வீட்டிலும் உங்களுக்கு தெரிந்தோ அல்லது தெரியாமல�ோ இப்படி
யாராவது இறந்திருந்தால் அந்த தெய்வத்தை மனதார நினைத்து இந்த ஆடி மாத
ஞாயிற்றுக்கிழமையில் வழிபாடு செய்யலாம்.
ஆடி மாதம் அம்மன்
க�ோவில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?
தவத்தில் சிறந்து விளங்கிய ஜமத்கனி முனிவரை ப�ொறாமை காரணமாக கார்த்த
வீரியார்சுனனின் மகன்கள் க�ொன்று விடுகின்றனர். இதை கேள்விப்பட்டு துக்கம்
தாங்க முடியாமல் ஐமத்கனி முனிவரின் மனைவி ரேணுகாதேவி உயிரை விட
முடிவு செய்து தீயை மூட்டி அதில் இறங்குகிறார்.
17. நித்ரா
நித்ரா காலண்டர்
காலண்டர் 15
அப்போது இந்திரன் மழையாக மாறி தீயை அணைத்தார். தீக்காயங்களால்
ரேணுகாதேவியின் உடலில் க�ொப்பளங்கள் ஏற்பட்டன. வெற்றுடலை மறைக்க
அருகில் இருந்த வேப்பமர இலைகளை பறித்து ஆடையாக அணிந்தார்.
ரேணுகாதேவிக்கு பசி ஏற்பட்டதால் அருகில் உள்ள கிராம மக்களிடம் சென்று
உணவு கேட்டார். அப்போது மக்கள் அவருக்கு பச்சரிசி, வெல்லம், இளநீரை
உணவாக க�ொடுத்தனர். இதைக்கொண்டு ரேணுகாதேவி கூழ் தயாரித்து
உணவருந்தினார்.
அப்போது சிவபெருமான் த�ோன்றி ரேணுகாதேவியிடம், உலக மக்களின் அம்மை
ந�ோய் நீங்க நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த
உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரமாகும் என்று வரம் அளித்தார். இச்சம்பவத்தை
நினைவு கூறும் வகையில் ஆடி மாதத்தில் அம்மன் க�ோவில்களில் கூழ் வார்க்கும்
திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும், ஆடி மாதம் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால்
எங்கும் தூசியாக இருக்கும். இதனால் காய்ச்சல், இருமல் ப�ோன்ற ந�ோய்கள்
வரலாம். இதை தவிர்க்கவே மாரியம்மன் க�ோவில்களில் ஆடி மாதம் முழுவதும்
கூழ் ஊற்றுவார்கள். இதை ஆடிக்கஞ்சி என்பர்.
ஆடி அமாவாசை.. விரதம் இருப்பது எப்படி?
(ஜூலை 28)
மாதந்தோறும் வரும் அமாவாசை தினமானது, இறந்த நமது முன்னோர்களை
நினைத்து விரதம் கடைபிடிக்க ஏற்ற நாளாகும். இவற்றில் தை அமாவாசை, ஆடி
அமாவாசை, புரட்டாசி அமாவாசை ப�ோன்றவை முக்கியத்துவம் க�ொண்டவை.
இதில் மிகவும் விசேஷமானது ஆடி அமாவாசையாகும்.
18. நித்ரா
நித்ரா காலண்டர்
காலண்டர் 16
சூரியனும், சந்திரனும் சேரும் புனிதமான ஆடி அமாவாசையன்று
முன்னோர்களையும், இறந்த தாய், தந்தையரையும் நினைத்து திதி க�ொடுப்பது
நல்லது. புண்ணிய நதிகள், கடல் ப�ோன்ற இடங்களில் புனித நீராடி இஷ்ட
தெய்வங்களை வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்தால்
பாவங்கள் விலகி, புண்ணியம் உண்டாகும்.
ஆடி அமாவாசையன்று கடல், ஆறு ப�ோன்ற நீர்நிலைகளில் நீராடினால்
தீவினைகள் அகலும். அமாவாசையில் விரதம் இருந்து எள்ளும், தண்ணீரும்
இறைத்து, பிண்டம் ப�ோடுதல் ப�ோன்றவற்றை செய்ய வேண்டும். தாய், தந்தை
இறந்த தேதியை மறந்தவர்கள் ஆடி அமாவாசையன்று திதி க�ொடுக்கலாம்.
ஆடி அமாவாசையன்று மூதாதையர்களின் படத்திற்கு மாலை ப�ோட்டு,
அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை படைத்து அவர்களை வணங்க
வேண்டும். முதலில் காகத்திற்கு உணவிட்டு பின்பு விரதம் முடிக்க, கர்ம வினைகள்
நீங்கும் என்ற நம்பிக்கை இக்காலத்திலும் உள்ளது.
விரதம் இருப்பது எப்படி?
ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து அருகில் இருக்கும்
கடல், ஆறு ப�ோன்ற நீர்நிலைகளுக்கு சென்று குளித்துவிட்டு இறந்த
முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். அதன்பிறகு முதியவர்களுக்கு
அன்னதானம் வழங்க வேண்டும். அமாவாசையன்று பெண்கள் வீட்டில் காலை
உணவு உண்ணாமல் இறந்த மூதாதையர்களுக்கு பிடித்தமான உணவுகளையும்,
எண்ணெய் பதார்த்தங்களையும் செய்ய வேண்டும்.
அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ள
வேண்டும். விரதம் இருப்பவர்கள் எதுவும் சாப்பிடாமல் எத்தனை நபர்களை
வணங்க வேண்டும�ோ அத்தனை இலைகள் ப�ோட்டு சமைத்த உணவு,
எண்ணெய் பதார்த்தங்கள், துணிகள் வைத்து அகல் விளக்கேற்றி, தூபம், தீபம்
காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். பிறகு படைத்த
உணவுகளை இலையில் வைத்து காகத்திற்கு படைக்க வேண்டும்.
முன்னோர்களுக்குப் படைத்த உணவுகளை காக்கைகள் உண்ட பிறகு, வீட்டிற்குள்
முறைப்படி அமர்ந்து சாப்பிட வேண்டும்.
முறைப்படி விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின்
ஆசி கிடைக்கும். முன்னோர் செய்த பாவ வினைகள் நீங்கி அவர்களுக்கு
முக்திப்பேறு கிடைக்கும். ஆடி அமாவாசையன்று தர்ப்பணம் செய்த பிறகு,
பசுவிற்கு அகத்திக்கீரை க�ொடுப்பது நல்லது.
19. நித்ரா
நித்ரா காலண்டர்
காலண்டர் 17
முன்னோரை உரிய காலத்தில் வணங்கினால் அனைத்துவிதமான
நன்மைகளையும்பயக்கும்.வருடத்தில்96முறைதர்ப்பணங்கள்செய்யவேண்டும்
என்கிறது நமது வேதம். அனைத்தையும் செய்யாவிட்டாலும் ஆடி மற்றும் தை
மாத அமாவாசைகளில் மட்டும் அவசியம் செய்ய வேண்டும். அவ்வாறு தவறும்
பட்சத்தில் மகாளய பட்சத்தில் செய்ய வேண்டும்.
தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் :
நம் முன்னோர்கள் இறந்த திதி, பட்சம் மற்றும் இறந்த மாதத்தில் தான் சிரார்த்தம்
செய்ய வேண்டும். முன்னோர்கள் இறந்த நாள் அல்லாமல் அவர்கள் இறந்த
நட்சத்திரத்தில் செய்யக்கூடாது. ஏனெனில் அன்று திதி மாறுவதற்கான
வாய்ப்புள்ளது. எனவே, இறந்த திதியில் தர்ப்பணம் செய்வதே உத்தமம்.
இவ்வாறு நாம் செய்யும் தர்ப்பணங்களால் முன்னோர்கள் மனம் குளிர்ந்து ஆசி
வழங்குவார்கள். இதனால் நாமும், நம் சந்ததிகளும் இனிதே வாழ முடியும்.
ஆடிப்பூரம் - (ஆகஸ்ட் 01)
மாதந்தோறும் பூரம் நட்சத்திரம் வந்தாலும், ஆடியில் வரும் பூரம் ஆண்டாளின்
அவதாரத்தினால் விசேஷமாகிறது. விஷ்ணு பக்தையாக வாழ்ந்து, ‹சகலமும்
அவனே› என அவனுடன் ஐக்கியமானவர். ஆழ்வார்கள் வரிசையை அலங்கரித்து
பெண் இனத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவர் ஆண்டாள்.
ஆண்டாள் அவதரித்த நாள் :
பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவதுப�ோல, நம்மைப் படைத்த அன்னைக்கு
வளைகாப்பு நடத்தி மகிழ்ந்திடும் நாளே ஆடிப்பூரம். அகிலாண்ட க�ோடி
பிரம்மாண்ட நாயகிக்கு வளைகாப்பு நடக்கும் நாள்தான் ஆடிப்பூரம்.
20. நித்ரா
நித்ரா காலண்டர்
காலண்டர் 18
அன்னை உள்ளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும்
நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் க�ொண்டாடும் நாள் திருவாடிப்பூரம்.
ஆடிப்பூரம் அன்று பூமி தாயினை வழிபட்டு அவளின் அருளை பரிபூரணமாக
பெறுவ�ோம்.
அம்மனுக்கு வளைகாப்பு :
உலக உயிர்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் அன்னைக்கு
ஆடிப்பூர நாளில் வளைகாப்பு நடத்தப்படுகிறது. வளைகாப்பு முடிந்ததும்
அன்னையை அலங்கரித்த வளையல்கள் அனைத்தும் பெண் பக்தர்களுக்கு
பிரசாதமாக வழங்கப்படும்.
அம்மனுக்கு சாற்றப்பட்ட வளையல்களை வாங்கி அணியும் திருமணமாகாத
பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
அதேப�ோல் திருமணமாகியும் குழந்தைப்பேறு இல்லாத பெண்களுக்கு நல்ல
மக்கட்பேறு கிட்டும்.
ஆடிப்பூர தினத்தில் அம்மன் க�ோவிலுக்கு சென்று அம்மனுக்கு கண்ணாடி
வளையல்கள் வாங்கி அளிப்பது நன்மை மட்டுமின்றி புண்ணியத்தையும் தரும்.
அம்மனுக்கு படைத்த வளையலை கர்ப்பிணிகள் கைகளில்
அணிந்துக்கொண்டால், சுகப்பிரசவம் நிகழும்.
ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு,
பணம் வைத்து க�ொடுப்பது நல்லது.
ஆடிப்பூரத்தன்று மஞ்சள் தாலி கட்டிக்கொள்ள தீர்க்க சுமங்கலியாய் இருப்பார்கள்.
ஆடிப்பூரம் அன்று சக்தி ஸ்தலங்களில் அம்மன் ஆலயங்களில் வழிபட, கேட்கும்
வரம் கிடைக்கும். ஆர�ோக்கியம், செல்வ செழிப்பு உண்டாகும்.
21. நித்ரா
நித்ரா காலண்டர்
காலண்டர் 19
ஆடிப்பெருக்கு - (ஆகஸ்ட் 03)
ஆடிப்பெருக்கு என்பது நதியைக் க�ொண்டாடும் விழா. தண்ணீரைக்
க�ொண்டாடும் வைபவம். முக்கியமாக, காவிரி நதியைப் ப�ோற்றுகிற ஒப்பற்ற
திருவிழா. தண்ணீரின் அருமையை உணர்ந்தவர்கள் நீருக்கு விழா எடுக்கும்
நாள்.
ஆடிப்பெருக்கன்று நதிகளை வழிபடுவதன் மூலம் நீர்வளம் பெருகும்
என்பது நம்பிக்கை. அதே ப�ோல திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம்
பெருகவும், திருமணமாகாத பெண்கள் மனதிற்கு பிடித்த கணவரை மணக்கவும்
காவிரித்தாயை வழிபடலாம்.
ஆடிப்பெருக்கன்று புத்தாடை அணிந்து, சர்க்கரைப் ப�ொங்கல், புளிய�ோதரை,
எலுமிச்சை, தயிர் சாதம், வடகம் முதலான பதார்த்தங்களை எடுத்துச்சென்று,
நதிக்கரைகளில் அமர்ந்து நதிகளை தாயாகக் கருதி பூஜித்து விருந்துண்டு
மகிழ்வார்கள். இந்த தினத்தில் செய்யப்படும் மங்கள காரியங்கள் பன்மடங்கு
பலன் தரும் என்பது ஐதீகம்.
அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும்
பூஜை செய்ய ஒரு இடத்தை பிடித்துக் க�ொண்டு, அந்த இடத்தை சுத்தம் செய்து,
பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார்
சிலை வைத்து, அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைத்து வழிபடுவார்கள்.
ஆற்றங்கரைக்குப் ப�ோகும் ப�ொழுதே, ஒரு முறத்தில் வெற்றிலை பாக்கு,
தேங்காய், பழம், பூ, ரவிக்கைத்துணி, காத�ோலை கருகமணி, திருமாங்கல்ய சரடு
என்று ஒரு பெண் விரும்பி ஏற்கும் அனைத்தையும் வைத்து, மற்றொரு முறத்தில்
மூடி எடுத்துச் செல்வர். ஆற்றங்கரையில் இவற்றை வைத்து தேங்காய் உடைத்து,
கற்பூரம் ஏற்றி வணங்குவர்.
22. நித்ரா
நித்ரா காலண்டர்
காலண்டர் 20
இந்த நன்னாளில் கணவனின் நலனுக்காக பிரார்த்திக்கும் ஒரு நாளாகவும்
ச�ொல்லலாம். காத�ோலை கருகமணி, காப்பரிசி வைத்து பூஜை செய்யும்
கன்னிப்பெண் சீக்கிரமே நல்ல கணவனை அடைவாள் என்பது நம்பிக்கை.
தானிய அபிவிருத்தி (பயிர்கள் செழிக்க) அருளும் அம்பிகையை, பெண்கள்
வம்ச அபிவிருத்தி (நற்குழந்தைப் பேறு) வேண்டி வழிபாடுகள் நடத்துவார்கள்.
குலம் விளங்க, நல்வாரிசுகள் அமைய அம்பிகையை மனமுருகிப் பிரார்த்தனை
செய்வார்கள்.
ஆடிப்பெருக்கன்று பெண்கள் தாலி பெருக்கி ப�ோடுவார்கள். இதன்மூலம்
கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கை. மேலும், புது மணப்பெண்கள்
ஆடிப்பெருக்கன்று புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள்.
ஆடிப்பெருக்கு தினத்தன்று மறக்காமல் விரதமிருந்து வீட்டிலும் பூஜை
செய்யுங்கள். வீட்டில் நாம் செய்யும் பூஜை செல்வத்தையும், அமைதியையும்
பலமடங்கு பெருக அருள்புரியும். பூஜையை வீட்டிலேயே எளிய முறையில்
செய்யலாம்.
ஆடிப்பெருக்கிற்கு வீட்டில் பூஜை செய்வது எப்படி?
நிறைக்குடத்தில் இருந்து ஒரு செம்பு தண்ணீர் எடுத்து,அதில் அரைத்த மஞ்சளை
சேர்க்க வேண்டும்.இந்த தீர்த்தத்தை விளக்கின் முன் வைத்து,சர்க்கரை ப�ொங்கல்
படைக்க வேண்டும்.
பூக்கள் தூவி அம்மனை ப�ோற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு
தீபாராதனை செய்து கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட
புண்ணிய நதிகளை மனதார நினைத்து வழிபட வேண்டும்.
ஆடிப்பெருக்கு புராணக்கதை :
குருச்ஷேத்திரப் ப�ோரின் முதல் நாள், பாண்டவர் படைகள் அபிமன்யுவால்
காக்கப்பட்டும், பீஷ்மரின் அம்புகளால் பலத்த சேதமடைந்தது. உத்தரனும்,
சுவேதனும், சல்லியனாலும், பீஷ்மராலும் க�ொல்லப்பட்டனர். பாண்டவர் படைகள்
முதல்நாள்ப�ோரில்படுத�ோல்விஅடைந்ததைசரிகட்ட,பீஷ்மரைக்க�ொல்லஅணி
வகுத்தனர். ஆனால் க�ௌரவர் படைகள் பீஷ்மரைக் காத்து நின்று ப�ோரிட்டது.
பீஷ்மரைக் க�ொல்ல சிகண்டியைப்,ப�ோர்க்களத்தில் பீஷ்மருக்கு எதிராக நிறுத்திப்
ப�ோரிட கிருஷ்ணர் ஆல�ோசனை கூறினார். கிருஷ்ணரின் ஆல�ோசனையின்படி
சிகண்டியை பீஷ்மருக்கு எதிராகப் ப�ோரிட ப�ோர்க்களத்திற்கு அனுப்பினர்.
இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சிகண்டியின் பின் இருந்து, அர்ஜூனன்
தனது அம்புமழையால் பீஷ்மரின் உடலை சல்லடையாக துளைத்தெடுத்து,
23. நித்ரா
நித்ரா காலண்டர்
காலண்டர் 21
அம்புப்படுக்கையில் கிடத்தினான்.
இப்படி த�ொடர்ந்து 15 நாள் ப�ோர் நடக்க
ஒவ்வொருவராக ப�ோரில் இறந்து
க�ொண்டே வந்தனர்.
16ஆம் நாள் ப�ோரில் க�ௌரவர்களின்
தலைமைப் படைத்தலைவராக
கர்ணன் நியமிக்கப்பட்டான்.
கர்ணனின் தேரை சல்லியன் ஓட்டினார்.
கர்ணன் ப�ோரில் இலட்சக்கணக்கான
பாண்டவப்படைகளைக் க�ொன்றான்.
அர்ஜூனன் தனது கூர்மையான
அம்புகளால் கர்ணனின் தாக்குதலைத்
தடுத்து நிறுத்தினான்.
கர்ணன், தருமரையும்
சகாதேவனையும் ப�ோரில்
வென்றாலும், தன் தாய் குந்திக்கு
வழங்கிய வரத்தின்படி, க�ொல்லாமல்
விட்டு விட்டான். ஆயிரக்கணக்கான
பாண்டவப்படைகளைத் தனது
கூரிய அம்புகளால் க�ொன்று பின்
அர்ஜூனனைக் க�ொல்ல அம்பு மழை
ப�ொழிந்து கடுமையாக ப�ோரிட்டான்.
ஒரு நேரத்தில், கர்ணன் அர்ஜூனனை
க�ொல்ல, அர்ஜூனனின் கழுத்துக்கு
குறிவைத்து நாகபாணத்தை ஏவினான்.
அப்போது பகவான் கிருஷ்ணர்,
அர்ஜூனனின் தேரை ஒரு அடி கீழே
அழுத்தினார். அர்ஜூனனின் தேர்
பூமிக்குக் கீழ் ஒரு அடி இறங்கியது.
அதனால் கர்ணன் ஏவிய நாகபாணம்,
அர்ஜூனனின் கழுத்தை தாக்காது,
அவனின் தலைக்கவசத்தை
தாக்கியதால், அர்ஜூனனின்
தலைக்கவசம் மட்டுமே கீழே விழுந்தது.
கிருஷ்ணரின் ப�ோர் தந்திரத்தால்
அர்ஜூனன் உயிர் பிழைத்தான்.
24. நித்ரா
நித்ரா காலண்டர்
காலண்டர் 22
குருச்ஷேத்திரப் ப�ோரின் இறுதியில் கர்ணனின் தேர்ச்சக்கரம் சகதியில் மாட்டிக்
க�ொண்டது. கர்ணன் தேரைச் சகதியில் இருந்து மீட்கும் நேரத்தில், கிருஷ்ணர்
அர்ஜூனனை கர்ணனின் மீது அம்புகள் ஏவச் ச�ொன்னார். இந்திரன், கர்ணனின்
கவச குண்டலங்கள் தானமாகப் பெற்றுக் க�ொண்டபடியால், தெய்வீகக் கவசம்
இல்லாத கர்ணனின் மீது செலுத்தப்பட்ட அர்ஜூனனின் கூரிய அம்புகள்
கர்ணனின் நெஞ்சைச் சல்லடையாக துளைத்தன. அதனால் கர்ணன் ப�ோரில்
மடிந்தான்.
அதர்மம் அழிக்கப்பட்டு, தர்மம் நிலைநாட்டப்பட்ட இந்த நாள் தான் பதினெட்டாம்
ப�ோர் என்று அழைக்கப்படும் ஆடி 18ஆம் நாளாகும்.
நாகத�ோஷம் நீக்கும் நாக சதுர்த்தி
(ஆகஸ்ட் 01)
கருட பஞ்சமிக்கு முன்பு சதுர்த்தி திதி அமையும் நாள் நாக சதுர்த்தி நாளாகும்.
பாற்கடலில் இருந்து வெளிவந்த ஆலகால விஷத்தினை சிவபெருமான் உண்ட
தினமாக இந்நாள் கருதப்படுகிறது.
இந்நாளில் அஷ்ட நாகங்களான வாசுகி, ரட்சகன், காளிங்கன், மணிபத்ரன்,
ஐராவதன்,திருதராஷ்டிரன்,கார்க்கோடகன்,தனஞ்சயன்ஆகியவர்களைவணங்க
வேண்டும்.நாக த�ோஷத்திற்காக இந்த நாளில் நாக கற்களை வழிபடுதல்,புற்றுக்கு
பால் ஊற்றுதல் ப�ோன்ற சடங்குகளை செய்கின்றனர்.
ராகு-கேது த�ோஷங்களால் திருமணம் நடக்காதவர்கள், குழந்தை பாக்கியம்
இல்லாதவர்கள் இந்த நாகங்களை வழிபடுகின்றனர். நாகப்பிரதிகளுக்கு
புது துணி கட்டி பாலால் அபிஷேகம் செய்கின்றனர். சிலர் அருகிலுள்ள நீர்
நிலைகளிலிருந்துநீரெடுத்துவந்துஅவைகளுக்குஅபிஷேகம்செய்கின்றார்கள்.
25. நித்ரா
நித்ரா காலண்டர்
காலண்டர் 23
நாக சதுர்த்தி அனுஷ்டிக்கப்படுவதற்கு காரணம் என்ன?
ஒரு பெண்ணுக்கு இரண்டு சக�ோதரர்கள் இருந்தனர். அவர்கள் வயலில் வேலை
செய்து க�ொண்டிருக்கும்போது நாகப்பாம்பு கடித்து இறந்துவிட்டனர். அவர்களை
உயிர்ப்பித்து தரும்படி அந்தப் பெண், நாகராஜனை வேண்டி ந�ோன்பு செய்தாள்.
அவரது வேண்டுக�ோளுக்காக அவளது சக�ோதரர்களை நாகராஜன் உயிர்ப்பித்த
நிகழ்வினை த�ொன்மையாக கருதுகிறார்கள்.
அதுவே நாக சதுர்த்தி. பாம்பு கடித்து இறந்தவருக்கு உயிர்ப்பிச்சை அளிக்கும்படி
கருடனை ந�ோக்கிச் செய்த ந�ோன்பு கருட பஞ்சமி. தங்கள் விருப்பம் ப�ோல் நாக
சதுர்த்தி, நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதங்களை மேற்கொள்வார்கள்.
என்ன செய்ய வேண்டும்?
நாக சதுர்த்தியன்று நாக தேவதைக்குப் பூஜை செய்து, புற்றுக்குப் பால் ஊற்றி,
புற்று மண்ணை பிரசாதமாக அணிந்து க�ொள்வார்கள்.
அன்றைய தினம் ஒன்பது நாக தேவதைகளான அனந்தன், வாசுகி, கிஷகாலன்,
அப்ஜன், மகரி அப்ஜன், சங்குபாலன், கார்க்கோடகன், குளிகன், பத்மன்
ஆகிய�ோர்களின் நாமத்தைச் ச�ொல்லிக்கொண்டே புற்றுக்குப் பால் ஊற்றிப்
பூஜிப்பது நல்லது.
திருமணத்தடை, தீர்க்க சுமங்கலி பாக்கியம், வேலை கிடைப்பதில் தடை,
எடுத்த செயல்கள் முடிவதில் உள்ள தடை நீங்க, இந்நாளில் பெண்கள் விரதம்
மேற்கொள்வார்கள்.
நாக பஞ்சமி நாளில் பெண்கள் விரதம் இருந்து விளக்கேற்றி வழிபட்டால்
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும்.
புற்றுக்கு பால் தெளித்து, விநாயகருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்து,
செம்பருத்தி மலர்கள் சூட்டி, விளாம்பழம், கரும்பு நைவேத்தியம் செய்து 12 முறை
வலம் வந்து வணங்கினால் நன்மை உண்டாகும்.
26. நித்ரா
நித்ரா காலண்டர்
காலண்டர் 24
ஆடி மாதத்தில் கருட
பஞ்சமி விரதம் இருப்பது ஏன்? - (ஆகஸ்ட் 02)
பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு மனைவிகளுள் கத்ரு, வினதை
என்றஇருசக�ோதரிகளும்இருந்தார்கள்.கத்ருஎன்பவள்நாகர்களுக்குதாயாகவும்,
வினதை அருணைக்கும், கருடனுக்கும் தாயாகவும் விளங்கினார்கள். ஒருமுறை
கத்ருவுக்கும், வினதைக்கும் விவாதம் வளர்ந்து ப�ோட்டியில் வந்து நின்றது.
அந்தப் ப�ோட்டியில் வெற்றி பெற்றவருக்கு த�ோற்றவர் அடிமையாக வேண்டும்
என்ற ஒப்பந்தத்தை வகுத்து க�ொண்டனர்.
ப�ோட்டியின் முடிவில் வினதை த�ோல்வியுற்று அடிமையானதால், அவள் பெற்ற
அருணனும், கருடனும் அடிமைகளானார்கள். கருடன் கத்ருவுக்கும், அவளது
பிள்ளைகளுக்கும் வாகனம்போல் ஆனான். இதனால் கருடன் மனம் வருந்தி
தனது தாயை எப்படியாவது அடிமை வாழ்க்கையிலிருந்து மீட்க வேண்டும் என்று
சபதம் க�ொண்டான். அப்போது கத்ரு கருடனிடம், தேவேந்திரனிடமிருந்து அமிர்த
கலசத்தை க�ொண்டுவந்து தந்தால் அடிமைத்தனத்திலிருந்து மூவருக்கும்
நிரந்தரமான விடுதலை தருவதாக ச�ொன்னாள்.
கருடன், அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வழி பிறந்ததே...
என்று மகிழ்ச்சியடைந்து, தன் தாயை வணங்கி தேவல�ோகம் சென்றான்.
தேவல�ோகத்தில், காவல் புரிந்து க�ொண்டிருந்த தேவர்களுக்கும், கருடனுக்கும்
இடையில் கடும் ப�ோர் நடந்தது. இறுதியில் கருடன் வெற்றி பெற்று,
தேவேந்திரனை வணங்கி, அவனிடமிருந்து அமிர்த கலசத்தை பெற்றுவந்து
கத்ருவிடம் க�ொடுத்தான். மூவருக்கும் ஏற்பட்டிருந்த அடிமை வாழ்வை நீக்கி,
ஆனந்தமாக வாழ வழி செய்தான், கருடன். அந்த கருடன் பிறந்த தினம் கருட
பஞ்சமி என்று அழைக்கப்படுகின்றது.
27. நித்ரா
நித்ரா காலண்டர்
காலண்டர் 25
பெருமாளின் வாகனமாகவும், க�ொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த
விரதம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று அனுசரிக்கப்படுகின்றது. கருட
பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை
அமைத்துக் க�ொடுக்கும். கருடனைப் ப�ோல பலசாலியாகவும், புத்திமானாகவும்,
வீரனாகவும் மைந்தர்கள் அமைய திருமணமான பெண்கள் கருட பஞ்சமியன்று
விரதம் இருக்கின்றனர். அன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள்
செய்கின்றனர்.
வினதையின் மைந்தன் கருடனின் மாற்றாந்தாய் கத்ருவின் மைந்தர்கள்தானே
நாகங்கள். அவர்கள் செய்த சூழ்ச்சியினால்தானே வினதை அடிமையாக இருக்க
நேர்ந்தது. அன்னையின் அடிமைத்தனம் களைய கருடன் தேவல�ோகம் சென்று
அமிர்தம் க�ொண்டு வர நேர்ந்தது. அப்போதுதான் பெருமாளுடன் கருடன்
ப�ோரிடும் வாய்ப்பும் வந்தது. பின் பெரிய திருவடியாக எப்போதும் பெருமாளை
தாங்கும் பாக்கியமும் கிட்டியது. எனவே கருட பஞ்சமியன்று ஆதிசேஷன்
விக்கிரகம் வைத்து பூஜை செய்யப்படுவதாக ஐதீகம். மேலும் கருடனின் உடலில்
எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்ட நாகங்களே. கருட பஞ்சமியன்று
க�ௌரி அம்மனை நாகவடிவில் அலங்கரித்து, ந�ோன்பு இருந்து பூஜை செய்வது
மிகவும் நல்லது.
விரதம் இருக்கும் முறை :
கருடபஞ்சமியன்றுவீட்டைதூய்மைசெய்து,மாவிலைத�ோரணம்கட்டி,அன்னை
க�ௌரியை பூஜிக்க வேண்டும். க�ௌரி அம்மன் நாகத்தின் உருக்கொண்டு
வருவதாக ஐதீகம். நம்முடைய சக்திக்கு தகுந்தாற்போல வெண்கலம், செம்பு
அல்லது வெள்ளி உல�ோகத்தில் சிறு நாக உருவத்தை வைத்து வணங்கலாம்.
முதலில்முழுமுதற்கடவுள்விநாயகருக்குபூஜைசெய்தபின்ஒருசிறியதட்டில்நாக
உருவத்தை வைத்து,மஞ்சள்,குங்குமம் தரித்து,பூக்களால் அஷ்டோத்திரங்களைக்
கூறி பூஜிப்பர். பின்பு பசும் பால் ஊற்றி வணங்க வேண்டும். நைவேத்தியமாக
பால் க�ொழுக்கட்டை, பாயாசம் செய்து வைத்து, தூபம், தீபம், கற்பூர ஆரத்தி ஏற்றி
வணங்குதல் நல்லது.
மாலையில்அம்மன்க�ோவிலில்உள்ளபுற்றுகளுக்குபசும்பாலும்,நைவேத்தியமாக
பால் க�ொழுக்கட்டையும், பாயாசமும் படைத்து வணங்க வேண்டும். கருட பஞ்சமி
பூஜை செய்த பின்பு, நாக உருவத்திற்கு ந�ோன்பு கயிறு சாற்றிவிட்டு, வீட்டில் உள்ள
பெண்கள் ந�ோன்புக்கயிறு கட்டிக் க�ொள்ள வேண்டும்.
28. நித்ரா
நித்ரா காலண்டர்
காலண்டர் 26
தீர்க்க சுமங்கலி வரத்தை
அருளும் வரலட்சுமி விரதம் - (ஆகஸ்ட் 05)
வரலட்சுமி ந�ோன்பு என்பது பதினாறு வகை செல்வத்திற்கும் அதிபதியான
லட்சுமியின் அருள் வேண்டி சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கும் விரதமாகும்.எந்த
வீட்டிலெல்லாம் வரலட்சுமி விரத பூஜைகள் செய்யப்படுகிறத�ோ... அந்த வீட்டுக்கு
மகாலட்சுமி வருவாள். வருவதுடன் வீட்டிலேயே இருந்து வாசம் செய்வாள்.
தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர்.
இவ்விரதம்ஆடிமாதத்தில்வரும்ப�ௌர்ணமிக்குமுன்வரும்வெள்ளிக்கிழமையில்
மேற்கொள்ளப்படுகிறது. வரலட்சுமி விரத பூஜையை காலை அல்லது மாலையில்
உங்கள் வசதிக்கேற்ப செய்யலாம்.
பூஜைக்கு வேண்டிய ப�ொருட்கள் :
மஞ்சளால் பிடித்த பிள்ளையார், வாழை இலை, அரிசி, தேங்காய், பழம், பாக்கு,
கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, எலுமிச்சைப்பழம், குங்குமம், திருநீறு, சந்தனம்,
மலர்கள், குத்துவிளக்கு, ந�ோன்பு கயிறு, நகை மற்றும் பணம் வைத்தும்
வழிபடலாம்.
பூஜை செய்யும் முறை :
ஒரு தாம்பூலத்தில் அரிசியை பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம்,
வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம்,
திராட்சை ஆகிய பழ வகைகளையும் நிவேதனத்திற்காக வைக்கலாம்.
29. நித்ரா
நித்ரா காலண்டர்
காலண்டர் 27
அதன்பிறகு வாசலில் உள்நிலைப்படி அருகே நின்று வெளியே ந�ோக்கி கற்பூர
ஆரத்தி காட்டி மகாலட்சுமியை வீட்டிற்குள் வருமாறு அழைக்க வேண்டும்.
மகாலட்சுமி வீட்டிற்குள் வந்துவிட்டதாக பாவனை செய்து, பூஜையில் உள்ள
கலசத்தில் அமர்ந்து அருள்புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் க�ொண்டு
ஆவாஹணம் (தெய்வத்தை மனதில் எண்ணுதல்) செய்ய வேண்டும்.
மகாலட்சுமி உங்கள் வீட்டிற்குள் வந்து விட்டாள். அன்னைக்கு மனம் குளிர
பூஜைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருக்க வேண்டும்.
அப்போது மங்களகரமான மந்திரங்களை ச�ொல்லவும். மகாலட்சுமிக்கு உரிய
பாடல்களையும் பாடலாம்.
இதையடுத்து ந�ோன்புக் கயிற்றை கும்பத்தில் சாற்றி பூக்களால் அர்ச்சிக்க
வேண்டும். லட்சுமியின் 108 ப�ோற்றி மற்றும் லட்சுமி அஷ்டோத்ரசதம் ச�ொல்லவும்.
மகாலட்சுமி தாயே எங்கள் வீட்டில் நீங்கள் நிரந்தரமாக தங்க வேண்டும்.
எங்களுக்கு எல்லா செல்வங்களையும் நீங்கள் தர வேண்டும் என்று மனம் உருகி
வணங்க வேண்டும்.
பின்னர் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ள மூத்த
சுமங்கலிப் பெண்களுக்கு முதலில் பிரசாதம் க�ொடுக்க வேண்டும். இளம்
பெண்கள் அவரிடம் ஆசி பெற்றுக்கொள்ள வேண்டும். இப்படி வரலட்சுமி
விரத பூஜையை நெறி தவறாமல் செய்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருள்
உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
நிவேதனம் :
ப�ொங்கல், பாயாசம், அப்பம், வடை, க�ொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய்,
தேன் மற்றும் கற்கண்டு ப�ோன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம்.
வரலட்சுமி விரதத்தின் முக்கியத்துவம் :
இந்த விரதத்தின் முக்கியத்துவமே சுமங்கலிப் பெண்கள் தங்களின் கணவன்
நீண்ட ஆயுளுடன் எந்த குறையும் இல்லாமல் வாழ, த�ொழில் சிறக்க வேண்டும்
என்பதுதான்.
அதனால் கிடைக்கும் தனம், ப�ொருள் வரவு மூலம் மனைவி மற்றும்
குழந்தைகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்
என எல்லா வரத்தையும் தரக்கூடிய மகாலட்சுமி தேவியை நினைத்து
கடைபிடிக்கக்கூடிய விரதமாகும்.
30. நித்ரா
நித்ரா காலண்டர்
காலண்டர் 28
விரதத்தின் பலன்கள் :
மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.
உயர்ந்த ஞானம் கிடைக்கும்.
மனதில் உள்ள விருப்பங்கள் ஈடேறும்.
திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
குழந்தை பாக்கிய தடைகள் நீங்கும்.
ஜாதகத்தில் சுக்கிர த�ோஷம், களத்திர த�ோஷம், மாங்கல்ய த�ோஷம் நீங்கும்.
கணவன்-மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி
அன்யோன்யம் அதிகரிக்கும்.