God Casts Off His People | தேவன் தம் ஜனத்தை தள்ளிவிட்டார்? | Devan Tham Janangalai Thallivittaar?
போதகர்: முனைவர் இராபர்ட் சைமன்.
சங்கீதம் 77:1 முதல் 20 வரை உள்ள வசனங்களை தியானிக்கலாம்.
சங்கீதம் 77 மிகவும் அருமையான ஒரு வேத பகுதி. இந்த சங்கீதத்தின் தலைப்பு ஆசாபின் சங்கீதம். எந்த சங்கீதத்தை எடுத்தாலும் தாவீது சொல்லியிருப்பார் என்று நாம் சொல்லுவோம். இந்த சங்கீதத்தை ஆசாப் எழுதியுள்ளார்.
1 நாளாகமம் 25 : 1 கூறுகிறது - மேலும் சுரமண்டலங்களாலும் தம்புருகளாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் குமாரரில் சிலரை, தாவீதும் தேவாலயச் சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்; ..
ஆசாப் ஒரு தீர்க்கதரிசி. எதுதூனும் ஒரு தீர்க்கதரிசி. இவர்கள் எல்லாரும் ஒன்றாக வாழ்ந்தவர்கள்.
ஆசாப் இந்த சங்கீதத்தை எழுதி எதுதானிடம் கொடுத்தான். நம்முடைய வேதாகமத்தில் ஆசாப் எழுதியதில் 12 சங்கீதங்கள் காணப்படுகிறது .
சங்கீதம் 77 இல் உள்ள 20 வசனங்களில் இருந்து ஏழு குறிப்புகளை காணலாம்.
1. ஆத்தும வியாகுலம்
2. ஆவியின் ஆராய்ச்சி
3. ஆய்வின் பயன்
4. ஆவியின் விழிப்பு
5. ஆத்தும வெளிச்சம்
6. ஆழங்கள் அவரைக் காணும்
7. ஆண்டவர் நடத்துவார் ஆமென்.
1.ஆத்தும வியாகுலம்
சங்கீதம் 77:1 - நான் தேவனை நோக்கி என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், என் சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
தாவீது தன் மகன் அப்சலோமால் விரட்டப்பட்டதை குறித்து வேதனை ஒரு பக்கம் . ஆசாப் தேவனை நோக்கி தனது கலக்கமான நேரத்தில் கெஞ்சி கேட்கிறார். எனது ஆத்துமா ஆறுதல் அடைய மறுக்கிறது. அவர் இரவு பகலாக ஜெபித்தும் அவருக்கு தூக்கம் வரவில்லை. நான் ஜெபிக்கும் போது என் ஆவி தொய்ந்து போயிற்று . இரவிலும் அவரது கை தளராமல் ஜெபத்தில் இருந்தது. அதற்கு ஆண்டவர் செவி கொடுத்தார்.
தாவீதின் காலத்தில் தீர்க்கதரிசியாக இருந்த ஆசாப் சாலமோனின் காலத்திலும் வாழ்ந்து வருகிறான் . சாலமோன் காலத்து நிகழ்வுகளை குறித்தும் ஆசாப் வேதனை அடைகிறான் .
2. ஆவியின் ஆராய்ச்சி
சங்கீதம் 77: 5 - பூர்வநாட்களையும், ஆதிகாலத்து வருஷங்களையும் சிந்திக்கிறேன்.
சங்கீதம் 77: 6. - இராக்காலத்தில் என் சங்கீதத்தை நான் நினைத்து, என் இருதயத்தோடே சம்பாஷித்துக் கொள்ளுகிறேன்; என் ஆவி ஆராய்ச்சி செய்தது.
ஆசாப் தான் எழுதின சங்கீதங்களை குறித்து ஆராய்ச்சி செய்கிறான். அந்த ஆராய்ச்சியின் முடிவு- அவன் சிந்திக்கிறான், ஆண்டவர் நித்திய காலமாய் தள்ளி விடுவாரோ? அவருடைய கிருபையும் முற்றிலுமாய் அற்றுப் போயிற்றோ? நிறைய வாக்குத்தத்தங்கள் தந்தாரே- அவையெல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விட்டதோ? ஆண்டவர் இரக்கம் செய்ய மறந்தாரோ? இப்படியெல்லாம் ஆசாபின் மனம் ஆராய்ச்சி செய்தது. சேலா.
3. ஆய்வின் பயன்
சங்கீதம் 77: 10 - அப்பொழுது நான்: இது என் பலவீனம்; ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன்.
கடல் கொந்தளித்தது. கப்பல் ஆடியது. இயேசு படகில் இருக்கிறார். அவர் காற்றையும் கடலையும் அதட்டினார்.
நீங்கள் கடல் கொந்தளிக்கும் போது, பதறிப் போகும் இயேசுவின் சீடர்களாக இருக்க விரும்புகிறீர்களா?
(To Be Continued)
For More details please visit: https://carmelministries.in/sermons/god-casts-off-his-people/